திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 13 பேர் டுபாயில் கைது!

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 13 பேர் டுபாயில் கைது!

இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 13 பேர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெலியத்தை பகுதியில் ஐவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் அடங்குகின்றமை தெரியவந்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களுக்கு அமைய, அங்கு இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் குறித்த 13 இலங்கையர்களுடம் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களும் அடங்குவதாக அந்த நாட்டு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் கைதாகியுள்ளவர்களின் பெயர் விபரங்கள் இதுவரையில் உரிய முறையில் கிடைக்கப் பெறவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் குறிப்பிடுகின்றனர். 

அதேநேரம் கைது செய்யப்பட்டவர்களில் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக குழுவொன்று தயார் நிலையில் உள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.