கொஸ்லாந்தை பகுதியில் 141 பேர் இடம்பெயர்வு!

கொஸ்லாந்தை - கெலிப்பனாவல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 31 குடும்பங்களை சேர்ந்த 141 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கொஸ்லாந்தை பகுதியில் 141 பேர் இடம்பெயர்வு!

அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இடம்பெயர்ந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் ஒரு மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி, வடக்கு, கிழக்கு, மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மழைப் பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.