குற்றத்தை மறைப்பதற்கு கையூட்டல் - 2 பொலிஸ் அதிகாரிகள் கைது!

குற்றத்தை மறைப்பதற்கு கையூட்டல் - 2 பொலிஸ் அதிகாரிகள் கைது!

கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் களுத்துறை - இத்தேபான பொலிஸ் நிலையத்தின் இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து விதிமீறல் குற்றத்தை மறைப்பதற்காக அவர்கள் கையூட்டல் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தலைக்கவசம் அணியாது மோட்டார் வாகனத்தில் பயணித்த ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இத்தேபான காவல்துறையின் போக்குவரத்து பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த குற்றத்தை மறைப்பதற்கு 10,000 ரூபாவை கையூட்டலாக கோரிய நிலையில், அதனை காவல்நிலையத்தில் பெற்றுக்கொள்ள முற்பட்ட போது, குறித்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.