இஸ்ரேலினால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 26 பேர் பலி!

காசாவின் தெற்கு பகுதியில் இஸ்ரேலினால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலினால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 26 பேர் பலி!

காசாவின் தெற்கு பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

 அத்துடன், குறித்த தாக்குதலில் 23 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், காசாவிற்கு பல்வேறு நாடுகளினாலும், அமைப்புகளினாலும், மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

 இதேவேளை, காசாவில் நிலவும் காலநிலை மாற்றத்தால் அங்குள்ள மக்கள் உணவு தட்டுப்பாடு மற்றும் நோய்களுக்கு உள்ளாகும் சாத்தியம் நிலவுவதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.