பொலன்னறுவை வீதி விபத்தில் 30 பேர் காயம் - நால்வர் கவலைக்கிடம்!

பொலன்னறுவை - மனம்பிட்டிய – வெலிகந்த பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலன்னறுவை வீதி விபத்தில் 30 பேர் காயம் - நால்வர் கவலைக்கிடம்!

அரிசி ஆலையொன்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயணித்த பேருந்து ஒன்றே இன்று காலை விபத்துக்குள்ளானது.
 
சாரதி பேருந்தின் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியை விட்டு விலகி குறித்த பேருந்து விபத்துக்குள்ளானது. 

அத்துடன், விபத்தில் காயமடைந்த ஒன்பது பேர் வெலிகந்த பிரதேச வைத்தியசாலையிலும், 21 பேர் பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில், 28 பெண்களும், இரண்டு ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

விபத்தின் போது 70 பேர் குறித்த பேருந்தில் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.