சுற்றுலாத்துறையின் ஊடாக 342 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்!

சுற்றுலாத்துறையின் ஊடாக 342 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்!

கடந்த ஜனவரி மாதத்தில், சுற்றுலாத்துறையின் ஊடாக 342 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் பதிவான மாதம் ஒன்றின் அதிகூடிய வருவாய் என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் 269 மில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலாத்துறையின் ஊடாக வருமானமாக ஈட்டப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், கடந்த டிசம்பர் மாதத்தினை காட்டிலும், ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு பணவணுப்பலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் வெளிநாட்டு பணவணுப்பலின் ஊடாக 570 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப் பெற்றிருந்த நிலையில், ஜனவரி மாதத்தில் 488 மில்லியன் அமெரிக்க டொலர் மாத்திரமே கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.