ஐக்கிய அரபு இராச்சியத்தில் 44 இலங்கை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பல்வேறு சிறைச்சாலைகளில் தண்டனை பெற்றுவந்த 44 இலங்கையர்களுக்கு அந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 44 இலங்கை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

52ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு கடந்த 2ஆம் திகதி அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கைத் தூதரகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பொதுமன்னிப்பு பெற்று சிறைச்சாலைகளிலிருந்து விடுதலையான 44 இலங்கையர்களையும் மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.