இலங்கையர் 68 பேர் இன்டர்போலின் சிவப்பு பட்டியலில் தேடுதல்!
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள இலங்கையர்கள் 68 பேர் திட்டமிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இந்த சிவப்பு அறிவிப்புகளின்படி வெளிநாடுகளில் கைதுகள் நடைபெற்று வருவதாகவும், நேற்று முன்தினம் துபாயில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த மூன்று பேரும் இந்த வாரம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், வெளிநாடுகளுக்குச் சென்ற குற்றவாளிகள் அழைத்து வரப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.