இலங்கை பொலிஸாரால் மிலேச்சத்தனமாக சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களுக்கு நினைவேந்தல்!

இலங்கை பொலிஸாரால் மிலேச்சத்தனமாக சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களுக்கு நினைவேந்தல்!

இலங்கை பொலிஸாரால் மிலேச்சத்தனமாக கடந்த 2016 ஆம் ஆண்டு சுட்டு படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களான கஜன், சுலக்சன் ஆகியோரது 7ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கபட்டது 

இதன்பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர்களால், அவர்களின் நினைவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ச்சியாக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் நெவில்குமாரினால் நினைவுபேருரையும் ஆற்றப்பட்டது.

இதன்பொழுது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் நெவில்குமார், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.