அஸ்வெசும பயனாளிகளின் குடும்ப அலகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்!

அஸ்வெசும பயனாளிகளின் குடும்ப அலகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்!

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்ட பயனாளிகளின் குடும்ப அலகுகளின் எண்ணிக்கையை ஜூன் மாதம் முதல் 24 இலட்சமாக அதிகரிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிததுள்ளார்

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்த பயனாளிகளின் தரவுகள் சரிபார்ப்பு மற்றும் சான்றுபடுத்தல் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் 2024 மார்ச் 15 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்கள் எவரும் அஸ்வெசும பலனைப் பெறத் தகுதி பெற மாட்டார்கள் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்

பொய்யான தகவல்களின் மூலம் அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற சுமார் ஏழாயிரம் பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்துக்கு 12 இலட்சத்து 27 ஆயிரம் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளன.

அவர்களில் சுமார் 11 இலட்சத்து 97 ஆயிரம்  பேர் தொடர்பில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொகைக்கு மேலதிகமாக, அஸ்வெசும உதவிகள் உண்மையிலேயே தகுதியான ஒரு குழுவினருக்கு கிடைக்கவில்லை.

முதல்கட்ட விண்ணப்பத்தில் அவர்களுக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்காததால், அவர்களுக்கு அஸ்வெசும பலன் கிடைக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.