இளைஞர் மற்றும் யுவதியை துன்புறுத்தியமை குறித்து விசாரணை!

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது இளைஞர் ஒருவரையும் யுவதி ஒருவரையும் துன்புறுத்தும் வகையில் சோதனை நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

இளைஞர் மற்றும் யுவதியை துன்புறுத்தியமை குறித்து விசாரணை!

விசாரணைகளின் நிறைவில் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்றைய தினம் நாடளாவிய ரீதியாக 44 பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

அதிவேக நெடுஞ்சாலையிலும் இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.