தமிழ் பொது வேட்பாளரால் சஜித்திற்கு ஏற்பட்டுள்ள அபாயம்! 

தமிழ் பொது வேட்பாளரால் சஜித்திற்கு ஏற்பட்டுள்ள அபாயம்! 

வடக்கு - கிழக்கில் அதிகமான வாக்கு வங்கி சஜித் பிரேமதாசவுக்கு இருந்த நிலையில், தற்போது தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டமையால் சஜித் பிரேமதாசவின் பெரும்பான்மையான வாக்குகள் தமிழ் பொது வேட்பாளர் பக்கம் இழக்கப்பட கூடிய அபாயம் உள்ளதாக  இலங்கையில் இருக்கும் பொருளாதார ஆய்வாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சஜித் பிரேமதாசவின் வெற்றி வாய்ப்பை கேள்வி குறியாக்க கூடியதாகவே தமிழ் பொது வேட்பாளர் எடுக்கக் கூடிய ஒவ்வொரு வாக்கும் அமையும் என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழ் பொது வேட்பாளரின் வாக்கு, சஜித் பிரேமதாச எடுக்கக்கூடிய வாக்குகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.