சாரதிகளுக்கான அறிவிப்பு - வெல்லம்பிட்டி முதல் கொட்டிக்காவத்தை வீதி மூடல்!

நீர்க்குழாய் பொருத்தும் பணிகளுக்காக வெல்லம்பிட்டி முதல் கொட்டிக்காவத்தை வரையான வீதி மூடப்படவுள்ளது.

சாரதிகளுக்கான அறிவிப்பு - வெல்லம்பிட்டி முதல் கொட்டிக்காவத்தை வீதி மூடல்!

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றிரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரையான காலப்பகுதியில் குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

எனவே, குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.