இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு உயர்வு!

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.kzk,

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு உயர்வு!

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 23.2 சதவீத அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சீனாவின் பரிமாற்று நிதிவசதியின் கீழ் பெறப்பட்ட 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களும் அடங்குவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை, 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சீமெந்து மூடை ஒன்றின் விலை 2 ஆயிரத்து 300 ரூபாவில் இருந்து 2450 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.