செப்டம்பருக்கான அஸ்வெசும கொடுப்பனவை இன்று முதல் பெறலாம்!

கடந்த செப்டம்பர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவுகளை இன்று முதல் பயனாளர்கள் பெற முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.

செப்டம்பருக்கான அஸ்வெசும கொடுப்பனவை இன்று முதல் பெறலாம்!

இதன்பொருட்டு, 1,377,000 குடும்பங்களுக்காக 8,571 மில்லியன் ரூபாய் நிதி வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வருட இறுதிக்குள் செலுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அஸ்வெசும திட்டத்திற்காக புதிதாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

இதனிடையே, முதியோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.