வழக்கிற்கு வந்த பெண்ணிடம் பாலியல் லஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி கைது!

அம்பாறை - கல்முனை நீதிமன்றத்திற்கு வழக்கிற்காக உதவி பெற வந்த பெண்ணொரிவரிடம் பாலியல் லஞ்சம் பெற முயற்சித்த உபபொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கிற்கு வந்த பெண்ணிடம் பாலியல் லஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி கைது!

அம்பாறை - கல்முனை நீதிமன்றத்திற்கு வழக்கிற்காக உதவி பெற வந்த பெண்ணொரிவரிடம் பாலியல் லஞ்சம் பெற முயற்சித்த உபபொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த உபபொலிஸ் பரிசோதகர் கல்முனை பொலிஸ் நிலையத்தின் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்தவராவார்.

சந்தேகநபர், கல்முனை பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் வைத்து லஞ்ச ஒழிப்பு பிரிவினரால் நேற்று கைதுசெய்யப்பட்டார்.

குறித்த உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்ற பணிக்காக வந்திருந்த பெண் ஒருவருக்கு, சட்ட ஆலோசனை வழங்குவதாக கூறி கடந்த 8 நாட்களாக தொலைபேசியின் ஊடாக, தொந்தரவு செய்து வந்தமை ஆரம்ப கட்ட  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.