வெடுக்குநாறி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் விளக்கமறியலில்!

வெடுக்குநாறி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் விளக்கமறியலில்!

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் நேற்றைய தினம் வவுனியா நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, குறித்த 8 பேரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சிவராத்திரி தினத்தன்று வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது பாதணிகளுடன் ஆலயத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.