இரண்டாம் நாளாக தொடரும் பலாங்கொடை மண் சரிவு தேடுதல் பணி!

பலாங்கொடை கவரங்ஹேன வெய்தென்ன மண் சரிவில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரையும் தேடும் பணி இரண்டாம் நாளாக இன்றும் இடம்பெறுகின்றது.

இராணுவம், பொலிஸார், பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக நேற்று இரவு தேடுதல் பணிகள் இடை நிறுத்தப்பட்டு மீண்டும் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

சீரற்ற காலநிலை தொடருமானால் இந்த பிரதேசத்தில் மேலும் மண் சரிவு ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மண்சரிவு அனர்த்தத்தில் தாய், தந்தை, 10 வயது மற்றும் 16 வயதான இரண்டு பெண் பிள்ளைகளும் காணாமல் போயுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.