யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் வீடொன்றின் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

எனினும், இந்த சம்பவத்தின் போது, எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, குறித்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.