வடக்கு - கிழக்கு மக்களின் வீடமைப்புக்கு 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், இடம்பெயர்ந்த மக்களின் வீடமைப்புக்கு 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு - கிழக்கு மக்களின் வீடமைப்புக்கு 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், இடம்பெயர்ந்த மக்களின் வீடமைப்புக்கு 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு மேலும் 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

ஹிங்குராக்கொட பகுதியில் சர்வதேச விமான நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

பூநகரி நகரை அபிவிருந்தி செய்வதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரச பணியாளர்களுக்கான வாழ்க்கை செலவு கொடுப்பனவு, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 10 ஆயிரம் ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் பல்கலைக்கழகமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, மேலும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படவுள்ள அதேவேளை, அதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கைக்காக 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள பொது வசதிகளை மேம்படுத்துவதற்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

சமூக பாதுகாப்பு வேலைத்திட்டத்துக்காக கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 3 மடங்காக அதிகரிக்கப்படவுள்ளது.

விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு 7,500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

பதுளை பொது வைத்தியசாலைக்கு இருதயம் மற்றும் நுரையீரல் இயக்கமீட்பு பிரிவொன்றை நிறுவுவதற்கு 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

அத்துடன், நன்னீர் மீன்பிடித் தொழிலின் அபிவிருத்திக்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

வடக்கு கடற்பகுதிகளில் மீன்பிடி வசதிகளை மேம்படுத்துவதற்கு 500 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.