ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பாதுக்க பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் மாணவர்களை ஆசிரியர் ஒருவர் தடியால் தாக்கியதில் 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மூன்று மாணவர்கள் உட்பட 7 மாணவர்கள் பாடசாலையின் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றிருந்த வேளையில் குறித்த மாணவர்களின் வகுப்பாசிரியர் இவர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் பாதுக்க காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.