புலமைப்பரிசில் பரீட்சைக்கான மீள்பரிசீலனை - கால அவகாசம் நிறைவு!

புலமைப்பரிசில் பரீட்சைக்கான மீள்பரிசீலனை - கால அவகாசம் நிறைவு!

கடந்த ஆண்டு இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான மீள்பரிசீலனை பெறுபேறுகளுக்கு அமைய பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 7ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இது தொடர்பான விண்ணப்பங்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, அவற்றை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்து மீண்டும் அதிபரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.