மதமாற்றம் செய்வதை தடுக்க காவல்துறைமா அதிபருக்கு கடிதம்!

மதமாற்றம் செய்வதை தடுக்க காவல்துறைமா அதிபருக்கு கடிதம்!

பதிவு செய்யப்படாத மத ஸ்தலங்கள் ஊடாக மதமாற்றம் செய்வதை தடுக்கும் வகையில் அந்த ஸ்தலங்களை சோதனையிடுமாறு கோரி காவல்துறைமா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

பௌத்த விவகார ஆணையாளருக்கு அமைச்சர் இந்த அறிவுறுத்தலை வழங்கியதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள மகாநாயக்க தேரர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அத்துடன் மத வழிபாட்டு தலங்கள் மற்றும் பிக்குகள் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.