திருத்தப் பணிகள் காரணமாக ஒரு வழிப் போக்குவரத்து - கரையோர ரயில் மார்க்கம்!

திருத்தப் பணிகள் காரணமாக ஒரு வழிப் போக்குவரத்து -  கரையோர ரயில் மார்க்கம்!

திருத்தப் பணிகள் காரணமாக கரையோர ரயில் மார்க்கத்தில் கொழும்பு – கோட்டை முதல் வெள்ளவத்தை வரையான ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ஒரு வழிப் போக்குவரத்து மாத்திரம் இடம்பெறுகின்றது. 

இன்று முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு இந்த செயற்பாடு இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கொம்பனி வீதி மற்றும் கொள்ளுபிட்டி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் காணப்படும் பாலத்தில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் குறித்த காலப்பகுதியில் அங்கு நீர் குழாய்களை திருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.