இலங்கையில் உள்ள 5 மாவட்டங்களில் அதிக வெப்பநிலை!

இலங்கையில் உள்ள 5 மாவட்டங்களில் அதிக வெப்பநிலை!


 இலங்கையில் உள்ள 5 மாவட்டங்களில் அதிக வெப்பநிலை பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, இரத்தினபுரி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினம் வெப்பச் சுட்டெண் எச்சரிக்கை மட்டத்தை அடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொது வெளிகளில் அதிக செயற்பாடுகளில் ஈடுபட்டால் சோர்வு ஏற்படக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் அதிக நீரை பருக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.