கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது

மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று இன்று (28) காலை கரை ஒதுங்கியுள்ளது.



அப்பகுதி கடலில் நேற்று மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள் அவதானித்துள்ளனர். இந்த நிலையில் இன்று (28) காலை கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் கரை ஒதுங்கியுள்ள பொருள் என்ன என்பது தமக்குத் தெரியாது. இப்பொருள் தொடர்ச்சியாக இவ்விடத்திலேயே இருக்குமாக இருந்தால் தமது மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக அமையும்.

எனவே இதனை சம்பந்தப்பட்டவர்கள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை களுவாஞ்சிகுடி பொலிசாரும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பொருள் சிவப்பு நிறத்தில் கூம்பக வடிவில் போத்தல் போன்று பெரியதாக இருப்பதுடன் பொருளின் மேற்பகுதியில பி.எம்.ரி. எனவும் பின்பக்கம் பி என்ற எழுத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

குறித்த பொருளில் ஒருபக்கமாக சிறிய ரக ரயர் ஒன்று பொருத்தப்பட்டு அதில் இரும்பிலான சங்கிலியும் பொருத்தப்பட்டுள்ளது.