யாழில் மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனை - ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனை - ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர், யாழ்ப்பாண பிராந்திய குற்றதடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து,  3 கிலோகிராம் 686 கிராம் நிறையுடைய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர் விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.