கிளிநொச்சியில் 18கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!

கிளிநொச்சியில் 18கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!
மன்னார் மாவட்ட போதைபொருள் ஒழிப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று (05) கஞ்சா பொதியுடன் திருமுருகன்டி பகுதியில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 18கிலோ 470கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் பொன்னகர் ஐயன்குளம் பகுதியை சேர்ந்த 34 வயது கோணாவிலை சேர்ந்தவர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
 
கைது செய்யப்பட்டவர் போதைபொருள் ஒழிப்பு பிரிவினரால் கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிசார் தெரிவிக்கின்றனர்.