தேசப்பற்றுள்ள முஸ்லிம் புதல்வர்களை - சுதந்திர போராட்ட வீரர்களாக அறிவிக்க வேண்டும் :  ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான்

தேசப்பற்றுள்ள முஸ்லிம் புதல்வர்களை - சுதந்திர போராட்ட வீரர்களாக அறிவிக்க வேண்டும் :  ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான்

தனது தாய் நாட்டின் சுதந்திரத்தை வேண்டி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராடியதற்காக அக்காலத்தில் ஏகாதிபத்தியங்களால் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்ட முஸ்லிம் தேசபக்தர்களையும் தேசப்பற்றுள்ள முஸ்லிம் சுதந்திர போராட்ட வீரர்களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். 

ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சியில் பங்கு பற்றிய தேசப்பற்றுள்ள சிங்கள பூமிபுத்திரர்களை மட்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி மூலம் சுதந்திர போராட்ட வீரர்களாக அறிவித்தமையானது அவரது நயவஞ்சக தனத்தை காட்டுவதாக  அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

இந்தநிலையில், திருகோணமலை சேகு தீதி, பீர்முஹம்மது மௌலவி, சலாம் உடையார் போன்றவர்களும் மட்டக்களப்பை சேர்ந்த  மீரா ஹுசைன் காரியப்பர், ஹுசைன் லெப்பை உதுமா லெப்பை ஆகியோரும், அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த அபுபக்கர் ஈஸா, அனிஸ் லெப்பை ஆகியோரும் சுதந்திரத்தை வேண்டி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராடியதற்காக தேசப்பற்றுள்ள சுதந்திர போராட்ட வீரர்களாக அறிவிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.