மறக்க முடியாத இசை நிகழ்ச்சிக்கு நன்றி - ஹரிஹரனின் X பதிவு!

மறக்க முடியாத இசை நிகழ்ச்சிக்கு நன்றி - ஹரிஹரனின் X பதிவு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி மறக்க முடியாத இசை நிகழ்ச்சி என தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

குறித்த இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இதில் பாடகர் ஹரிஹரன்,  நடிகை ரம்பா,  கலா மாஸ்டர், நடிகர் சிவா, பாலா, சாண்டி, சஞ்சீவ், ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்ய மானசா மற்றும் நந்தினி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், குறித்த இசைநிகழ்ச்சி குழப்பநிலை காரணமாக சில நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டதுடன் பின்னர் குழப்பநிலையில் நிறைவடைந்த

இந்தநிலையில், நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி குறித்து ஹரிஹரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில் “ மறக்க முடியாத இசை நிகழ்ச்சி நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உங்கள் அதீத அன்பும் ஆதரவும் இசையின் ஒருங்கிணைக்கும் சக்தியை வெளிப்படுத்தியது எனவும் நாங்கள் நல்லிணக்கத்தையும் இணைப்பையும் ஒன்றாக இணைந்து கொண்டாடினோம் எனவும் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒவ்வொரு நொடிக்கும் நன்றியுடையவனாக இருக்கின்றேன்” என ஹரிஹரன் குறிப்பிடப்பட்டுள்ளார்.