வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலி

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலி

வவுனியா பூவரசங்குளத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பஸ், தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது அதில் ஏறுவதற்கு முயன்ற போது குறித்த பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

சம்வத்தில் 76 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.