கொஸ்லந்தையில் விபத்து - பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பண்டாரவளை – கொஸ்லந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

கொஸ்லந்தையில் விபத்து - பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பண்டாரவளை – கொஸ்லந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (30) காலை இடம்பெற்றுள்ளது

கொஸ்லந்த பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று சுமார் 20 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 4 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் கொஸ்லந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.