பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

பல்கலைக்கழக அனுமதிக்கு 87,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தயாரிக்கும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் போதிய ஆளணிகள் இல்லாத காரணத்தினால் சில தடைகள் ஏற்பட்டுள்ளதோடு, பல பல்கலைக்கழகங்களின் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, அடுத்த மாத இறுதிக்குள் வெட்டுப்புள்ளிகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.