திருமண நிகழ்வில் உணவு ஒவ்வாமையால் யுவதி ஒருவர் உயிரிழப்பு!

புத்தளத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட யுவதி ஒருவர் உணவு ஒவ்வாமையால் உயிரிழந்தார்.

திருமண நிகழ்வில் உணவு ஒவ்வாமையால் யுவதி ஒருவர்  உயிரிழப்பு!

குறித்த திருமண நிகழ்வில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துக்கொண்ட போது அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த யுவதி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்

வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.