மற்றுமொரு விசேட வர்த்தமானி வெளியீடு!

மற்றுமொரு விசேட வர்த்தமானி வெளியீடு!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான மற்றுமொரு விசேட வர்த்தமானி தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமிக்கும் வர்த்தமானி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.