அநுராதபுரம் விபத்து - கெப் வாகன சாரதி உள்ளிட்ட மூவர் நீதவானிடம் முன்னிலை! 

அநுராதபுரம் விபத்து - கெப் வாகன சாரதி உள்ளிட்ட மூவர் நீதவானிடம் முன்னிலை! 

அநுராதபுரம் - மிஹிந்தலை – ரம்பேவ பகுதியில் மூன்று பேரை மோதி விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கெப் ரக வாகனத்தின் சாரதி உள்ளிட்ட மூன்று பேர் இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளனர்.

அநுராதபுரம் நீதவான் முன்னிலையில் குறித்த மூவரும் பிரசன்னப்படுத்தப்படவுள்ளனர். 

கெப்ரக வாகனத்தை செலுத்தியவர் 17 வயதான இளைஞர் எனவும் அவரிடம் சாரதி அனுமதி பத்திரம் இல்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிட சென்றவர்கள் மீது கெப் ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானது. 

இதனையடுத்து குறித்த கெப் ரக வாகனத்துடன் அதன் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

இந்தநிலையில் குறித்த கெப் ரக வாகனத்துடன் அதில் பயணித்த மூவரும் அநுராதபுரம் - யாழ்ப்பாண சந்தியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.