நாடாளுமன்ற கொடுப்பனவை முறைக்கேடாக பயன்படுத்திய அர்ச்சுனா

நாடாளுமன்ற கொடுப்பனவை முறைக்கேடாக பயன்படுத்திய அர்ச்சுனா

யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தனக்கான அலுவலரின் நாடாளுமன்றக் கொடுப்பனவை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளமையை வெளிப்படுத்தியுள்ளார்.

யூ ட்யூப் காணொளி ஒன்றில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தனது செலவு விபரங்களை பட்டியலிடுகையில், தனக்கான சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் என்பன தனது செலவீனங்களுக்குப் போதுமானதாக இல்லை எனவும், இதன் காரணமாக தனக்கான அலுவலர்களை நியமிக்க வழங்கப்பட்டுள்ள பாராளுமன்ற சலுகையில், ஆய்வு அலுவலராக தனது அண்ணன் மகன் ராமநாதன் அறிவன்பன் என்பவரை நியமித்து, அவருக்கு பாராளுமன்றத்தினால் கொடுப்பனவாக வழங்கப்படும் 56,000 ரூபாவை தனது செலவீனங்களுக்காக பெற்றுக்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

குறித்த தனது உறவினர், தனது செலவுகளுக்காக குறைந்த ஒரு பங்கைக் கேட்டதாகவும் அதற்குத் தான் மறுப்புத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ள அதேவேளை, அறிவன்பனுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை வைத்தே தனது செலவுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றக் கொடுப்பனவை முறைகேடாகப் பயன்படுத்தும் குறித்த விவகாரம் யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வாக்காளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.