இஸ்ரேலின் முக்கிய நகரம் மீது தாக்குதல்!

இஸ்ரேலின் முக்கிய நகரம் மீது தாக்குதல்!

இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள சேப்பாத் நகரின் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

லெபனானின் பெய்ரூட் நகர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்தே, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.   

ஹிஸ்புல்லா அமைப்பினர் 30 ஏவுகணைகளையாவது அனுப்பியிருக்கலாம் என இஸ்ரேலின் பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர்.

குறித்த ஏவுகணைகளில் சில தடுக்கப்பட்டிருந்தாலும் குறைந்தது இரண்டு ஏவுகணைகயேனும் சேப்பாத் நகரை தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலினால் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் நான்கு அணிகளாக செயற்பட்டு வருகின்றனர்.

மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என கருதப்படும் நபர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

அத்துடன், லெபனான் மற்றும் காசாவின் மக்களை ஆதரிக்கும் நோக்கிலேயே இந்த தாக்குதலை நடத்தியதாகவும் ஹிஸ்புல்லாக்கள் தெரிவித்துள்ளனர்.