பொலிஸ் அதிகாரிகள் மூவர் மீது கடுமையான தாக்குதல்!

தலாதுவ பகுதியில் இனந்தெரியாத சிலரின் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் மூவர் மீது கடுமையான  தாக்குதல்!

தலாதுவ - குருதெனிய வீதியில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தலாதுவ பொலிஸார் தெரிவி்த்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி அநாவசியமான முறையில் வீடொன்றுக்குள் உள்நுழைந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த பொலிஸ் அதிகாரி மற்றும் கன்ஸ்டபிள் அதிகாரி விடுமுறை நாட்களில் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

குறித்த அதிகாரிகள் மூவரும் தாக்கப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகியில்லாத நிலையில் சம்பவம் தொடர்பில் தலாதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.