சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பலாங்கொடடையில் விழிப்புணர்வு நிகழ்வு.

சிறுவர் துஷ்பிரயோக வாரத்தை முன்னிட்டுசிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று பலாங்கொடை மாரதென்ன பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது.

சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் வன்புணர்வு,சிறுவர்கள் தாக்கப்படுவது குறித்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். என்று விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர். சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விஷேட நிகழ்வுகளும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அதிகாரிகள்,அரச உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள், பாடசாலை மாணவர்கள், பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.