வரலாற்று சிறப்பு மிக்க பலாங்கொடை தப்தார் ஜெய்லானி கற்குகை பள்ளி வாசலின் 134 வது கொடியேற்றம்!

வரலாற்று சிறப்பு மிக்க பலாங்கொடை தப்தார் ஜெய்லானி கற்குகை பள்ளி வாசலின் 134 வது கொடியேற்றம் இன்று 16.10.2023 ஆரம்பமாகிறது.

வரலாற்று சிறப்பு மிக்க பலாங்கொடை தப்தார் ஜெய்லானி கற்குகை பள்ளி வாசலின் 134 வது  கொடியேற்றம்!

தொடர்ச்சியாக 30 நாட்கள் மௌழூத் ஓதப்பட்டு இறுதியாக கந்தூரி வழங்கும் வைபவம் நடைபெற உள்ளது.

அத்தோடு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இருந்து வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அனைத்து விதமான வசதிகளுடன்,  பாதுகாப்பும் வழங்கப்படும் என்று நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

இந்த பிரதேசத்தை அண்மித்து இருக்கும் வளவை கங்கை மற்றும் அதனை அண்மித்த நீர் நிலைகளில் நீர் மட்டம் அதிகரித்து உள்ளது.

இதனால், ஆற்றில் நீராடுவது, கூடாரம் அமைத்து தங்குவது, செல்ஃபி எடுப்பது, மீன் பிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதை முற்றாக தவிர்க்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.