17 நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு!

17 நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு!

2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த எசல பண்டிகை இன்று (06) ஆரம்பமாகவுள்ளது.

இதன் காரணமாக கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 17 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று (06) முதல் ஜூலை 22ஆம் திகதி வரை அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன.

கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 06 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.