எல்ல பகுதியில் பேருந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு !

பதுளை - எல்ல – வெல்லவாய வீதியின் ரஹதன்கந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எல்ல பகுதியில் பேருந்து  விபத்து - ஒருவர் உயிரிழப்பு !

பதுளை - எல்ல – வெல்லவாய வீதியின் ரஹதன்கந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதியினூடாக உமா ஓயா திட்டத்தின் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த மேலும் 8 பேர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்