பொதுமன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கைதிகள் விடுதலை!

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து  கைதிகள் விடுதலை!

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் நேற்று (13) மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஒரு பெண் கைதி உட்பட 40 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் ஆலோசனைக்கு அமைவாக இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம சிறைச்சாலை அதிகாரி ஏ.பீ.பானுக தயந்தசில்வா உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

சிறு குற்றம் புரிந்த தண்டனைப் பணம் செலுத்தாத கைதிகளே இதன்போது விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த இடத்தில் நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை பெருமளவாக அதிகரித்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக சிறு குற்றங்கள் புரிந்த கைதிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.