Facebook காதலை நம்பி வந்த இங்கிலாந்து யுவதி கல்கிஸையில் மரணம் - சட்டக்கல்லூரி மாணவன் கைது!

கல்கிஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து இளம் பெண் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்தார்.

Facebook காதலை நம்பி வந்த இங்கிலாந்து யுவதி கல்கிஸையில் மரணம் - சட்டக்கல்லூரி மாணவன் கைது!

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் இங்கிலாந்தை சேர்ந்தவர் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண் தவறி வீழ்ந்தாரா அல்லது தற்கொலை செய்துக்கொண்டாரா என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை.

மேலும் முகநூல் வழியாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவரை காதலித்துள்ளார்.

இந்த நிலையிலேயே அவர் கல்கிஸ்ஸ பகுதியிலுள்ள அடுக்குமாடி தொடரில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.

மேலும் நாளைய தினம் குறித்த பெண் இங்கிலாந்துக்கு திரும்ப செல்லவிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்த தமிழ் யுவதி தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன .

பேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் இலங்கை இளைஞனின் அழைப்பின் பேரில் இங்கிலாந்திலிருந்து இலங்கை வந்த யுவதியே உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி மற்றும் இளைஞன் கல்கிஸை – அல்விஸ் பிளேஸில் உள்ள “ப்ளூ ஓஷன் தொடர்மாடியில் தங்கியிருந்த நிலையில் 13வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் சின்னையா அழகேஸ்வரன் ரொமினா என்ற இளம் யுவதியே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவருடன் பேஸ்புக் ஊடாக உறவை பேணிய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் சட்டக்கல்லூரி மாணவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை பதில் நீதவான் ரத்னா கமகே நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார். மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.