பாடசாலை மாணவிக்கு நடந்த கொடூரம்: கைதான ஆசிரியருக்கு விளக்கமறியல்

பாடசாலை மாணவிக்கு நடந்த கொடூரம்: கைதான ஆசிரியருக்கு விளக்கமறியல்

அநுராதபுரம் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதான ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று  அநுராதபுரம் பிரதான நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அந்த பாடசாலையில் 9 தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார்.

மொரகொட பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய தகவல் தொழில்நுட்ப ஆசிரியரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் மாணவியை அந்தப்பகுதியில் உள்ள விடுதியொன்றுக்கு அழைத்து சென்று துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விடுதியின் உரிமையாளரையும் கைது செய்யவேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மாணவியின் மருத்துவ அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்