நாடு திரும்பினார் ஜனாதிபதி!

டுபாயில் நடைபெற்ற "காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில்" பங்கேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (04) இரவு நாடு திரும்பினார்.

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

இந்த மாநாட்டில், இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான கூட்டுத் திட்டமாக ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்துக்கான திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்தார்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இந்த மாநாட்டின் போது இடம்பெற்றது. 

இதேவேளை, ​​மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.