ஆதிவாசிகள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரின் தீர்மானம் .....

மட்டக்களப்பு வாகரை ஆதிவாசிகள் கிராமத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் விஜயமொன்றை முன்னெடுத்திருந்தார்.

ஆதிவாசிகள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரின் தீர்மானம் .....

குறித்த விஜயத்தின் போது ஆதிவாசிகளின் பிரச்சினைகளையும் கேட்டறிந்துக் கொண்டார்.

வாகரையில் உள்ள ஆதிவாசிகள் தங்களுடைய கிராமத்தில் பல வருட காலமாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருப்பதாக இதன்போது விசனம் தெரிவித்தனர். 

 தங்களுடைய கிராமத்தில் உள்ள பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் இதனால் மாணவர்கள் பாரிய சிரமத்திற்கு உள்ளாகிவதாகவும் தெரிவித்த அதேவேளை, கிராமத்திற்கான பாதைகளின் நிலைமைகள் குறித்தும் வைத்தியசாலைக்கு உதவியாளர்களை நியமித்து தருமாறும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் ஆதிவாசிகளின் கோரிக்கையின் பிரகாரம் 24 மணித்தியாலத்தில் மாகாண கல்வி அமைச்சின் ஊடாக 02 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதுடன் பாதை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளும்,வைத்தியசாலைக்கு உதவியாளரை நியமிப்பதற்கான வேலைத்திட்டத்தினை முன்னெடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் பணிப்புரை விடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.