விபத்தில் சிக்கிய பேருந்து - ஒருவர் பலி, 37 பேர் காயம்!

விபத்தில் சிக்கிய பேருந்து - ஒருவர் பலி, 37 பேர் காயம்!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 37 பேர் காயமடைந்துள்ளனர்.

கண்டி - நெல்லிகலை சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு வழிபாடு செய்வதற்காக 38 பக்தர்களுடன் பயணித்த பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் புடலுஓயா பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.