உடல்தகனம் செய்தவர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோர அமைச்சரவை அனுமதி!

உடல்தகனம் செய்தவர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோர அமைச்சரவை அனுமதி!

  
கொவிட் -19 காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கட்டாய உடற் தகனக்கொள்கையினால் பாதிக்கப்பட்டவர்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கோருவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிலத்தடி நீருக்குப் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்து, கொவிட் -19 தொற்றினால் இறந்தவர்களின் உடல்கள் கட்டாயத் தகனம் செய்ய வேண்டுமென தெரிவித்து 276 முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், நடத்தப்பட்ட ஆய்வில் அவ்வாறு கொவிட்-19 தொற்று உறுதியான நிலையில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது எனக் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சமூகத்திடம் அரசாங்கம் மன்னிப்பு கோருவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஆகியோர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.